3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெற அனில் அம்பானி மும்முரம்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஹெலிகாப்டர் தயாரிப்பு ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு ரிலையன்ஸ் குழுமத்தின் அனில் அம்பானி மும்முரம்காட்டி வருகிறார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமானது பாதுகாப்புத் துறையில் இறங்குவதற்காக ரிலையன்ஸ் டிபென்ஸ் சிஸ்டம்ஸ், ரிலையன்ஸ் டிபென்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் ரிலையன்ஸ் டிபென்ஸ், ஏரோஸ்பேஸ் ஆகிய மூன்று துணை நிறுவனங்களை ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் கீழ் உருவாக்கின.

Anil Ambani's Reliance Infrastructure to bid for military chopper contracts worth over $3 billion

இந்நிறுவனம் அண்மையில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பல் கட்டுமான துறை நிறுவனமான பிப்பாவ் நிறுவனத்தின் 18%பங்குகளை ரூ819 கோடிக்கு கைப்பற்றியிருந்தது.

இதனைத் தொடர்ந்து சர்வதேச பாதுகாப்பு தளவாட தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் கடந்த சில வாரங்களாக அனில் அம்பானி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ரிலையன்ஸ் குழுமமும் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றும் இணைந்து ஹெலிகாப்டர் தயாரிப்பில் முழு வீச்சில் இறங்க முடிவு செய்துள்ளது.

இந்திய கடற்படைக்கு தேவையான 100 ஹெலிகாப்டர்களை தயாரிப்பதற்கான சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்று இம்மாத இறுதியில் விடப்பட இருக்கிறது. இதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், ஹெச்..ஏ.எல் மற்றும் மஹிந்திரா ஏரோ ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களும் கோதாவில் குதித்துள்ளன.

எப்படியும் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதற்காக பெல், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அனில் அம்பானி இடைவிடாத ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+