வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் வன விலங்குகள் எண்ணிக்கை பந்திப்பூரில் அதிகரிப்பு
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் வாகன விபத்துக்களில் சிக்கி வன விலங்குகள் நிறைய உயிரிழக்கும் சூழல் உள்ளது என்றும் அதனால் உடனே அரசு உரிய நடவடிக்கை எடுத்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கவேண்டும்
பந்திப்பூர்: பந்திப்பூர் வனப்பகுதியில் விபத்துக்களால் இறக்கும் விலங்குகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வனவிலங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த பந்திப்பூர் வனப்பகுதி புலிகள் பாதுகாப்பு சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சரணாலயம் உலகப்புகழ் பெற்றதாகும்.

இங்கு யானைகள், சிறுத்தைகள், புலிகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் அதிகம் உள்ளன.பந்திப்பூர் வனப்பகுதி தமிழ்நாடு, கேரளா வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. குண்டலுபேட்டை-ஊட்டி, குண்டலுபேட்டை-கேரளா தேசிய நெடுஞ்சாலைகளும் இந்த வனப்பகுதியின் வழியாக தான் செல்கிறது. இதனால் தினமும் கேரளா, தமிழ்நாட்டில் இருந்து வரும் வாகனங்கள் பந்திப்பூர் வனப்பகுதி சாலை வழியாக தான் செல்கின்றன.
இந்த நிலையில் வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால், வனவிலங்குகள் அடிக்கடி உணவுதேடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கும், வனப்பகுதி சாலைக்கும் வருகின்றன. அவ்வாறு வரும்போது வேகமாக வரும் வாகனங்கள் மோதி உயிரிழக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிரிகரித்து வருகிறது.
இது குறித்து பந்திப்பூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
" பந்திப்பூர் வனப்பகுதி வழியாக கேரளா, தமிழ்நாட்டுக்கு காய்கறிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், லாரி டிரைவர்கள் சோதனை சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் பணம் கொடுத்துவிட்டு தடையை மீறி இரவு நேரங்களில் வேகமாக செல்வதாகவும், அதனால் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழப்பதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. இந்த புகார் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே சோதனைச்சாவடியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. " என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications