அப்பா கொண்டு வந்த சட்டம்... 12 ஆண்டுகளுக்கு பின்பு அமல்படுத்திய மகன்.. ஜெகன் அதிரடி
அமராவதி: ஆந்திர அரசு பற்றி தவறாகவோ, ஆதாரமற்ற செய்திகளையோ வெளியிட்டால் ஊடக நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக உணரும் ஆந்திர அரசு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
தவறான செய்தி வெளியிடும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறைக்கு அதிகாரம் அளித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

புதுமைத் திட்டங்கள்
ஆந்திர முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றது முதல் அம்மாநிலத்தில் பல்வேறு புதுமைத் திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார். அதற்கு உதாரணமாக அண்மையில் அவர் அறிவித்த நீண்டகால நோயாளிகளுக்கு ரூ.10,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கூறலாம். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் பத்தாயிரம் வழங்கும் திட்டத்தையும் கடந்த மாதம் தொடங்கி வைத்தார். இப்படி புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் ஜெகன்.

எதிர்ப்பு
செய்தி நிறுவனங்கள், வார இதழ்கள், மின்னணு ஊடகங்கள், நாளேடுகளில் அரசுக்கு எதிரான செய்திகளை தவிர்க்க, கடந்த 2007-ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர் ரெட்டி புதிய சட்டம் கொண்டுவந்தார். ஆனால் அப்போது அதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியது. அதற்குள் அவர் ஹெலிகாப்டர் விபத்தி சிக்கி மறைந்துவிட்டதால் அந்தச் சட்டம் அமல்படுத்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு 12 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது அதனை தூசு தட்டி எடுத்துள்ளார் ஜெகன்.

திருத்தம்
இந்நிலையில் தந்தை ராஜசேகர் ரெட்டி 2007-ல் கொண்டு வந்த சட்டத்தில் திருத்தம் செய்து இப்போது அமல்படுத்தியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 2007-ல் ஏற்பட்டது போல் இப்போது பலத்த எதிர்ப்புகள் ஏதும் உருவாகவில்லை. இந்த அதிரடி சட்டம் மூலம் சமூக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் அரசு பற்றி ஆதாரமற்ற செய்தி வெளியானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

கண்காணிப்பு
செய்தி நிறுவனங்கள் சரியான தகவல்களை வெளியிடுகிறதா என்பதை கண்காணிக்கவும், தவறான செய்தி வெளியிடும் நிறுவனங்கள் மீது அவதூறு வழக்கு தொடரவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தலைமை ஆணையருக்கு அதிகாரம் அளித்துள்ளார் ஜெகன் மோகன்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications