உங்கள் விடுதலையை ஏன் ரத்து செய்யக் கூடாது ?: சல்மான் கானுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: கார் விபத்து வழக்கில் இருந்து உங்களை விடுவித்ததை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சல்மான் கானிடம் கேட்டுள்ளது.
2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரை ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்றினார் என்பது புகார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
13 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி மும்பை உயர் நீதிமன்றம் சல்மான் கானை வழக்கில் இருந்து விடுவித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு நீதிபதிகள் ஜக்ஜித் சிங் கெஹார், சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரணைக்கு ஏற்ற அவர்கள் சல்மான் கான் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தால் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வழக்கை ஆறு வாரங்களில் விசாரிக்க உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் இது குறித்து சல்மான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். சல்மான் சார்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரான கபில் சிபல் கூறுகையில், விபத்து நடந்த அன்று காரை சல்மான் தான் ஓட்டினார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications