கிரிமினல் எம்பிகள் பதவி இழப்பு தீர்ப்பில் திருத்தம் கோரிய மனு தள்ளுபடி
டெல்லி: குற்ற வழக்கில் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பது தொடர்பான தீர்ப்பில் திருத்தம் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள், உடனடியாக தங்களின் பதவியை இழப்பார்கள் என்று கடந்த ஜூலை 10-ந் தேதியன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகும் முன்னரே குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவியையும் பறிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
இதே போல், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று எம்.பி. பதவிகளை இழந்த லாலு பிரசாத், ரஷீத் மசூத் பதவியிடங்கள் காலியானதாக அறிவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை ஏற்கெனவே விடுக்கப்பட்டு விட்டதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications