கடைசி நாள்வரை ஆசிரியராக வாழ்ந்தவர் அப்துல் கலாம்: மாணவர்கள் மத்தியில் மோடி புகழாரம்
டெல்லி: ஓய்வு பெற்ற பிறகும் ஆசிரியர் பணியாற்றி திருப்தியடைந்தவர் அப்துல் கலாம் என்று ஆசிரியர் தினத்தையொட்டி நடந்த மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மானக்ஷா ஆடிட்டோரியத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.

விழாவை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி துவக்கி வைத்தார். முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட மோடி, கலாஉத்சவ் என்ற பெயரிலான மாணவர்களுக்கான இணைய தளத்தையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்களிடம் மோடி பேசுகையில், முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் நாளைதான் என்றாலும், நாளை கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி விடுமுறை என்பதால் இன்று உங்களை சந்திக்கிறேன்.
டாக்டர், இன்ஜினியர், விஞ்ஞானி ஆகியோரை ஒரு ஆசிரியர் தான் உருவாக்குகிறார். ஆனாலும், அவர்கள் ஆசிரியராகவே தொடருகிறார்கள். ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை. ஆசிரியர்களை அங்கீகரிப்பதையே எனது அரசு நோக்கமாக கொண்டு வருகிறது.
மாணவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவே கலா உத்சவ் என்ற இணைய தளம் துவக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம், பதவியில் ஒய்வுபெற்ற பின்னரும் பாடம் எடுத்தார். இறந்த கடைசி நாள் வரை கலாம் ஆசிரியராக பணியாற்றினார். அவர் குழந்தைகளையும், மாணவர்களையும் மிகவும் நேசித்தார். எப்போதுமே தன்னை ஒரு ஆசிரியராக நினைவில் கொள்ளப்படவே கலாம் விரும்பினார்.
கலைகள் இல்லையெனில் நமது வாழ்க்கை இயந்திரத்தனமாகி விடும். நம் குழந்தைகள் ரோபோவை மாதிரி உருவாகாமல் பெற்றோர் தடுக்க வேண்டும். மாணவர்கள் வாழ்க்கையை வடிவமைப்பவர் ஆசிரியர்கள் தான் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 800 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்கள்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications