ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதிக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்பு தொடர்பான வாதம் தொடக்கம்
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் தயாநிதி, கலாநிதி மாறன், கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கப் பிரிவின் குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடர்பான வாதங்கள் இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் தொடங்கியது. அப்போது தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கப் பிரிவு சமர்ப்பித்தது. இவ்வழக்கின் விசாரணை வரும் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2004 முதல் 2007ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அவரது பதவிக் காலத்தில் ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரது நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்குதல் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 2011-இல் சிவசங்கரன் சிபிஐயிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2013-ல் சிபிஐ வழக்குத் தொடுத்தது.
ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்கியவுடன் அதற்குப் பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்தில், பல்வேறு நிறுவனங்கள் மூலம் மேக்சிஸ் நிறுவனம் ரூ.742 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. இதன் மூலம் தனது அதிகாரத்தை தயாநிதி மாறன் தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஏர்செல்- மேக்சிஸ் பணப் பரிமாற்றத்தில் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக அமலாக்கப் பிரிவும் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு தாக்கல் செய்திருந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், கலாநிதி மாறன் மனைவி காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இந்த குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை தொடர்பான வாதம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது அமலாக்கப் பிரிவு வழக்கறிஞர் மட்டா, தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகை மீதான பரிசீலனை வாதங்கள் வரும் 6-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி, ஷைனி தெரிவித்தார். வரும் 6-ந் தேதியன்று இருதரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டால் குற்றப்பத்திரிகையை ஏற்பது குறித்த முடிவை நீதிபதி ஷைனி தெரிவிப்பார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications