காஷ்மீரில் ராணுவ தளபதி தல்பீர்சிங் ஆய்வு... எல்லையில் ஊடுருவல் அபாயம் இருப்பதாக 'வார்னிங்
ஸ்ரீநகர்: ராணுவத்துக்கு எதிராக வன்முறைகள் நீடித்து வரும் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் நேற்று ஆய்வு நடத்தினார். தற்போதைய பதற்றமான சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் கூடுதல் கண்காணிப்புக்கும் தல்பீர்சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்ஹான் வானி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பத்திரிகைகள் எதுவும் வெளியாகவும் இல்லை.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது இந்த பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவக் கூடும் என்பதால் கூடுதலாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு ராணுவத்தினரை கேட்டுக் கொண்டார்.
மேலும் ராணுவ முகாம்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்கும்போது கூடுமானவரை பொறுமை காக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அதேபோல் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கிராமங்களில் உள்ள பெரியவர்களின் உதவியை பெற வேண்டும் என்றும் தல்பீர்சிங் கேட்டுக் கொண்டார். எல்லைப் பகுதிகளான குப்வாரா, அவந்திபோரா ராணுவ முகாம்களையும் தல்பீர்சிங் பார்வையிட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதனிடையே இன்று முதல் வரும் 26-ந் தேதி வரை கார்கில் போர் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications