காஷ்மீரில் ராணுவ தளபதி தல்பீர்சிங் ஆய்வு... எல்லையில் ஊடுருவல் அபாயம் இருப்பதாக 'வார்னிங்
ஸ்ரீநகர்: ராணுவத்துக்கு எதிராக வன்முறைகள் நீடித்து வரும் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் நேற்று ஆய்வு நடத்தினார். தற்போதைய பதற்றமான சூழலைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவதிகள் ஊடுருவலாம் என்பதால் எல்லையில் கூடுதல் கண்காணிப்புக்கும் தல்பீர்சிங் உத்தரவிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அண்மையில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி பர்ஹான் வானி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ராணுவத்தினர் உட்பட 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

அம்மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக பத்திரிகைகள் எதுவும் வெளியாகவும் இல்லை.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்து ராணுவ தளபதி தல்பீர்சிங் நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது இந்த பதற்றமான சூழ்நிலையைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவக் கூடும் என்பதால் கூடுதலாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு ராணுவத்தினரை கேட்டுக் கொண்டார்.
மேலும் ராணுவ முகாம்கள் மீது போராட்டக்காரர்கள் தாக்கும்போது கூடுமானவரை பொறுமை காக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அதேபோல் ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கிராமங்களில் உள்ள பெரியவர்களின் உதவியை பெற வேண்டும் என்றும் தல்பீர்சிங் கேட்டுக் கொண்டார். எல்லைப் பகுதிகளான குப்வாரா, அவந்திபோரா ராணுவ முகாம்களையும் தல்பீர்சிங் பார்வையிட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
இதனிடையே இன்று முதல் வரும் 26-ந் தேதி வரை கார்கில் போர் வெற்றி கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications