புது ஸ்கூல்.. தொழிற்சாலை.. வேலை.. வாழ்க்கையை மாற்றும் பலநன்மை இருக்கு.. காஷ்மீரில் ராணுவம் போஸ்டர்
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் விளையப்போகும் நன்மைகள் குறித்து கடந்த சில நாள்களாக தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியும், நோட்டீஸ்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது நமது இந்திய ராணுவம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. முன்னதாக இந்த அறிவிப்பை செய்யும் முன் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து, தொலை தொடர்பு சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வதந்திகள் மற்றும் வன்முறைகள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது.
தொலை தொடர்பு சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. வதந்திகள் மற்றும் வன்முறைகள் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கையை ராணுவம் மேற்கொண்டது.

வன்முறை சம்பவங்கள் இல்லை
அதன்பிறகு காஷ்மீரில் எந்த விதமான பெரிய அளவிலான வன்முறை சம்வங்கள் நிகழவில்லை. தற்போது அமைதியாக காணப்படும் காஷ்மீரில் மெல்ல மெல்ல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் காஷ்மீரில் மெதுவாக இயல்பு நிலை திரும்பி வருகிறது

370 ரத்தால் நன்மைகள்
காஷ்மீர் மாநிலம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திநிறுவனம் இன்று வெளியிட்டு இருந்த செய்தியில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் ஏற்படப்போகும் நன்மைகள் குறித்து அம்மாநில மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை ராணுவம் செய்து வருகிறது. இதன்படி காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கப்போகும் நன்மைகள் குறித்து தெற்கு காஷ்மீர் பகுதி முழுவதும் உருது மொழியில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. மக்களிடமும் நன்மைகள் எடுத்து சொல்லப்படுகிறது.

புதிய பள்ளிகள் திறக்கப்படும்
ராணுவத்தினர் ஒட்டியிருந்த உருது மொழி போஸ்டரில், புதிய கோச்சிங் சென்டர்கள், புதிய பள்ளிகள், திறக்கப்படும், புதிய ஓட்டல்கள் கட்டப்படும், மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ், மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். மேலும் ரியல் எஸ்டேட் மதிப்பு (சொத்து மதிப்பு) காஷ்மீரில் அதிகரிக்கும்.

வேலைகள் கிடைக்கும்
புதிய தொழிற்சாலைகள் வரும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நிறைய வேலைகள் கிடைக்கும். காஷ்மீரைச் சேர்ந்த பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் இனி அவர்களுக்கும் சொத்தில் சம உரிமை கிடைக்கும் என்பது குறித்து போஸ்டரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளில் பெரும்பாலானவை மக்களால் அகற்றப்பட்டாலும், சில மூடப்பட்ட கடையின் முன்பும் அல்லது காலியாக உள்ள கட்டிடங்களிலும் இன்னமும் உள்ளது என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications