அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம்.. ராணுவ அதிகாரி தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியதாக பாதுகாப்பு படையினர் ரகசிய தகவல் அளித்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த யாத்திரை எந்தவித தங்கு தடையின்றி நடக்கும் அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லாக்டவுனால் நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் வெள்ளிக்கிழமை 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர்.

அமர்நாத் யாத்திரைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுகுறித்து தெற்கு காஷ்மீரில் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.
ஆனால் அமர்நாத் யாத்திரையில் நமது கட்டமைப்பு வலிமையாக உள்ளதால் யாத்திரை எந்த தங்குதடையின்றி அமைதியாக நடக்கும். பாதுகாப்பு நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலை 44 பதற்றமாகவே உள்ளது. காந்தர்பால் மற்றும் பால்டால் செல்ல இந்த ஒரு வழிதான் இருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications