இந்திய வீரர்கள் சாகவில்லை.. பாகிஸ்தான் ராணுவ தளபதி பேட்டிக்கு இந்திய ராணுவம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய ராணுவ வீரர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷரிப் கூறுகையில், கடந்த 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 11 வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்திய ராணுவம் சுட்டதில் பாகிஸ்தான் ராணுவத்தில் 7 பேர் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அவசரமாக ரஹீல் இவ்வாறு ஒரு பேட்டியை நேற்று கொடுத்தார்.
இந்த அவசர பேட்டியை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதனிடையே இந்திய எல்லை அருகே ராணுவ ஒத்திகையை பாகிஸ்தான் நேற்று நடத்தி பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications