பதற்றம்.. காஷ்மீரில் 2 ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 3 வீரர்கள் பலி - துப்பாக்கிச்சண்டை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூன்ச் மாவட்டம் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற 2 ராணுவ வாகனம் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூன்ச் மாவட்டம் ரஜோரி பகுதியில் சுரன்கோட்டை எனும் இடம் உள்ளது. இதன் அருகே டிகேஜி எனும் டீரா கீ காலி என்ற இடம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அடிக்கடி இங்கு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவார்கள். இந்நிலையில் தான் உளவுத்துறையின் தகவலின் படி இந்த பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு முதல் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்ப பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று 2 ராணுவ வாகனம் அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் திடீரென்று ராணுவ வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் ராணுவ வாகனங்களை நோக்கி சுட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த 3 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து அங்கு உடனடியாக கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. அங்கு படை வீரர்களுக்கு உதவி செய்வதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயரதிகாரிகள் அங்கு நிலவும் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதுபற்றி இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛இந்த பகுதியில் தீவிரவாதிகள் பயங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. இன்று காலை, மாலை என தொடர்ந்தது. தற்போது துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது'' என்றார்.
தற்போது துப்பாக்கி சண்டை நடக்கும் இந்த பகுதியில் கடந்த மாதமும் கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது 2 கேப்டன்கள் உள்பட ராணுவத்தை சேர்ந்த 5 பேர் வீரமரணமடைந்தனர். இத்தகைய சூழலில் தான் ஒரு மாதத்தில் 2வது முறையாக இங்கு மீண்டும் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications