Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பதற்றம்.. காஷ்மீரில் 2 ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்.. 3 வீரர்கள் பலி - துப்பாக்கிச்சண்டை

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூன்ச் மாவட்டம் ரஜோரி பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற 2 ராணுவ வாகனம் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இதில் 3 வீரர்கள் வீரமரணமடைந்த நிலையில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூன்ச் மாவட்டம் ரஜோரி பகுதியில் சுரன்கோட்டை எனும் இடம் உள்ளது. இதன் அருகே டிகேஜி எனும் டீரா கீ காலி என்ற இடம் உள்ளது. இங்கு தீவிரவாதிகள் நடமாட்டம் என்பது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Army Truck attacked by terrorists in Jammu and Kashmirs now encouter going on

இதனால் அடிக்கடி இங்கு ராணுவத்தினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவார்கள். இந்நிலையில் தான் உளவுத்துறையின் தகவலின் படி இந்த பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு முதல் தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்ப பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி இன்று 2 ராணுவ வாகனம் அந்த வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது தீவிரவாதிகள் திடீரென்று ராணுவ வாகனங்களின் மீது தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் ராணுவ வாகனங்களை நோக்கி சுட்டனர். இதில் ராணுவத்தை சேர்ந்த 3 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து அங்கு உடனடியாக கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. அங்கு படை வீரர்களுக்கு உதவி செய்வதற்காக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உயரதிகாரிகள் அங்கு நிலவும் நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

இதுபற்றி இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛இந்த பகுதியில் தீவிரவாதிகள் பயங்கி இருப்பதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. இன்று காலை, மாலை என தொடர்ந்தது. தற்போது துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது'' என்றார்.

தற்போது துப்பாக்கி சண்டை நடக்கும் இந்த பகுதியில் கடந்த மாதமும் கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது 2 கேப்டன்கள் உள்பட ராணுவத்தை சேர்ந்த 5 பேர் வீரமரணமடைந்தனர். இத்தகைய சூழலில் தான் ஒரு மாதத்தில் 2வது முறையாக இங்கு மீண்டும் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+