தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை அதிகரிக்காத பட்ஜெட்! மக்கள் ஏமாற்றம்
டெல்லி: பொது பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியொன்றும் நடக்கவில்லை.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று பொது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் தனி நபர் வருமான வரி உச்சவரம்பை அதிகரிக்கும் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதுவரை ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பாதிப்பவர்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கும் அதிகம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30 சதவீதமும் தற்போது வரி விதிக்கப்படுகிறது.
நடுத்தர வர்க்கத்து சம்பளக்காரர்களில் பெரும்பாலானோர் ஆண்டுக்கு 2.50 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுவோர். எனவே ரூ.4 லட்சம் வரையில் வருமாவரியிலிருந்து விலக்கு அளிக்க நிதி அமைச்சகம் பரிசீலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகின. பாஜக கூட்டணி கட்சியான சிவசேனாவோ 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி விலக்கு தேவை என்ற கோரிக்கையை அளித்தது.
பண மதிப்பிழப்பு அறிவிப்பால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்கள்தான் பாஜகவின் வாக்கு வங்கி. எனவே அவர்களை குஷிப்படுத்தி ஆதரவை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி இன்றைய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் ஜேட்லி அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது என்ற யூகங்கள் பரவின.
குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சத்திற்குள் இந்த மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனி நபர்கள் தங்கள் வருமானத்தில் வரி சலுகைகள் பெற வகை செய்யும் 80சி பிரிவின் கீழ் மேலும் ரூ. 50,000 வரை வரிச் சலுகை பெறும் வகையில் திருத்தம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கான வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மட்டும் ஜேட்லி அறிவித்தார். இதனால் நடுத்தரவர்க்கத்து மக்கள் வரி பிடியிலிருந்து தப்பிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications