பொது பட்ஜெட்டை தாக்கல் செய்யும அருண் ஜேட்லி யார், என்ன படித்துள்ளார்?
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.
2015-2016ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் இரண்டாவது பொது பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,
1952ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி பிறந்தவர் அருண் ஜேட்லி.
அருண் ஜேட்லி தற்போது தான் முதன்முதலாக நிதி அமைச்சராகி உள்ளார். முன்னதாக அவர் வரி மற்றும் சட்டத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
பஞ்சாபி இந்து பிராமண குடும்பத்தில் பிறந்த ஜேட்லி டெல்லியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் படித்தார். பின்னர் எஸ்ஆர்சிசி கல்லூரியில் வணிகவியல் பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டமும் பெற்றார்.
ஜேட்லி உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உள்ளார்.
வி.பி. சிங் அரசால் 1989ம் ஆண்டு ஜேட்லி கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
1991ம் ஆண்டில் இருந்து அவர் பாஜகவின் எக்சிகியூட்டிவ் உறுப்பினராக உள்ளார். மோடி ஆட்சியில் அவர் ராஜ்யசபா தலைவராக உள்ளார்.
1999ம் ஆண்டில் இருந்து அவர் அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் இருந்துள்ளார்.
www.arunjaitley.com என்ற இணையதளம் வைத்துள்ளார்
ஏசியன் டெவலெப்மென்ட் வங்கியின் கவர்னர்கள் போர்டின் உறுப்பினராக உள்ளார்.
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க பெயர் போனவர் ஜேட்லி












Click it and Unblock the Notifications