சிங்கப்பூரில் அருண் ஜெட்லி! பிரதமர் லீ, துணை பிரதமர் சண்முக ரத்தினத்துடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி : மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 4 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
ஜெட்லி நேற்று டெல்லியிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். அவரது 4 நாள் அரசு முறை பயணத்தின்போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுாங்கை சந்திக்கும் ஜெட்லி, துணை பிரதமரும், நிதி அமைச்சருமான தர்மன் சண்முகரத்தினம், வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் ஆகியோரையும் சந்திக்கிறார்.

இதன்பிறகு சிங்கப்பூர் உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்கிறார் ஜெட்லி. இதையடுத்து ஹாங்காங் செல்லும் ஜெட்லி பின்னர் தாயகம் திரும்புகிறார்.
அன்னிய முதலீடுகளை இந்தியாவில் அதிகப்படுத்துவதே அவரது இப்பயணத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications