இன்று 84வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை துவங்கியது. செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அதன் பிறகு புதன்கிழமை பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அருண் ஜேட்லி 2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்று தாக்கல் செய்யப்பட்டது நாட்டின் 84வது பட்ஜெட் ஆகும். இது பிரதமர் நரேந்திர மோடி அரசின் முதல் பட்ஜெட் ஆகும்.
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Let us see what <a href="https://twitter.com/arunjaitley">@arunjaitley</a> does with the inheritance of loss. <a href="https://twitter.com/hashtag/IndiaTheyInherited?src=hash">#IndiaTheyInherited</a> <a href="https://twitter.com/hashtag/Budget2014?src=hash">#Budget2014</a> <a href="http://t.co/nbDmS1wcZH">pic.twitter.com/nbDmS1wcZH</a></p>— हम भारत के लोग (@India_Policy) <a href="https://twitter.com/India_Policy/statuses/487062705979658240">July 10, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>அருண் ஜேட்லி தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் இதுவாகும். அவர் தனது பட்ஜெட்டில் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications