ஆங்கிலம், ஹிந்தியில் கலந்து பேசிய அருண் ஜெட்லீ... இரண்டு மொழியிலும் பட்ஜெட் தாக்கல் செய்தார்!
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
Recommended Video

டெல்லி: 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தற்போது தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஜிஎஸ்டிக்கு பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும் இது.
இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அவர் ஹிந்தியில் மட்டுமே பேசுவார் என்ற சர்ச்சைக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

ஆங்கிலத்தில் தாக்கல்
அருண் ஜெட்லீ சென்ற வருடம் செய்த பட்ஜெட் தாக்கலை ஆங்கிலத்தில் செய்தார். ஆனால் இந்த முறை ஹிந்தியில் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இந்தியாவின் கிராம மக்களுக்கும் பட்ஜெட் சென்று சேர வேண்டும் என அவர் இந்தியில் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார் எனப்பட்டது.

பிரச்சனை ஆனது
இதனால் பெரிய சர்ச்சை உருவானது. அமைச்சர் இந்தியில் தாக்கல் செய்ய கூடாது என்று கூறப்பட்டது. இதனால் ஹிந்தி பேசாத மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்கள் பட்ஜெட்டை புரிந்து கொள்ள முடியாது என்று கூறப்பட்டது.
|
தொடக்கம்
இந்த நிலையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆங்கிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசி தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையின் முக்கியமான அம்சங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தது.
|
மீண்டும்
ஆனால் கொஞ்ச நேரத்தில் ஹிந்தியில் பேசினார். பல அறிவிப்புகள் தற்போது ஹிந்தியில் மட்டும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இந்திய வரலாற்றில் இரண்டு மொழிகளில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அருண் ஜெட்லீ பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications