கொலை வழக்கில் அருணாசல பிரதேச பாஜக அமைச்சர் மகனுக்கு ஆயுள் தண்டனை
Subscribe to Oneindia Tamil
இடாநகர்: கொலை வழக்கில் அருணாசல பிரதேச பாஜக அமைச்சரின் மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அர்7
அருணாசல பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டும்கே டக்ரா. இவரது மகன் கஜூம் பக்ரா 2017-ம் ஆண்டு கொலை வழக்கில் சிக்கினார்.

ஆலோ என்ற இடத்தில் ஹோட்டல் வெஸ்ட் என்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை படுகொலை செய்தார் கஜூம் பக்ரா. காண்டிராக்ட் விவகாரத்தில் இக்கொலை சம்பவம் நடந்தது.
இதையடுத்து கஜூம் பக்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இக்கொலைக்கு சாட்சியமாக சிசிடிவி காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டன. இவ்வழக்கில் கஜூம் பக்ராவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications