சீனாவின் ‘பேப்பர்’விசாவுக்கு எதிர்ப்பு: 2 அருணாச்சல் வில் வித்தை வீராங்கனைகளின் பயணம் ரத்து

அருணாச்சல் பிரதேச மாநிலத்தை தனது பகுதியாக கூறிக் கொண்டிருக்கிறது சீனா. இதுதொடர்பான வரைபடத்திலும் அதை தனது நாட்டுக்கு உட்பட்டதாகவே அது காட்டி வருகிறது.
மேலும் அருணாச்சல் பிரதேச மாநிலத்தவர்களுக்கு விசா வழங்கும்போது வழக்கமாக இந்தியர்களுக்கு வழங்குவதைப் போல கொடுக்காமல் தனியாக ஒரு சீட்டில் விசா தருவதை வழக்கமாக வைத்துள்ளது சீனா. இதை இதுவரை இந்தியா உறுதியாகவும், கடுமையாகவும் கண்டிக்காமல் இருந்து வருகிறது.
அதேசமயம், இப்படி தனியாக விசா தரும்போது அந்த விசாவுடன் வருபவர்களை சீனா செல்ல இந்தியா தடை விதித்து வருகிறது. இந்த நிலையில், அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டுவில் வித்தை வீராங்கனைகளுக்கு இப்படி தனியாக விசா கொடுத்துள்ளது சீனா. அவர்களை இந்திய அதிகாரிகள் சீனா செல்ல தடை விதித்து விட்டனர்.
அந்த வீராங்கனைகளின் பெயர் மிஹு மசேலோ மற்றும் யூமி சோரங். இவர்கள் 24 பேர் கொண்ட வில் வித்தை அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த அணி, சீனாவின் வுசியில் நடைபெறும் உலக இளைஞர் வில்வித்தை சாம்பியன் போட்டியில் கலந்து கொள்கிறது.
ஆனால் இரு அருணாச்சல் வீராங்கனைகளுக்கு தனியாக சீனா விசா கொடுத்திருப்பதால் அவர்களை மட்டும் சீனா செல்ல அனுமதிக்கவில்லை இந்திய குடியேற்றப் பிரிவு அதிகாரிகள்.
சாதாரண காகிதத் தாளில் சீன தூதரகம்கொடுத்துள்ள இந்த விசா சட்டவிரோதமானது, செல்லாது என்று அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் இரு அருணாசச்ல் வீராங்கனைகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது இரு வீராங்கனைகளும் டெல்லியில் உள்ள இந்திய வில்வித்தை சங்க ஓய்வு விடுதியில் தங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications