அருணாச்சலபிரதேசத்தில் பாஜகவிற்கு அதிர்ச்சி வைத்தியம்.. கட்சியை விட்டே வெளியேறிய முன்னாள் முதல்வர்
Recommended Video
இட்டாநகர்: அருணாசலப் பிரதேசம் முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக அருணாசலப் பிரதேசம் உள்ளது. அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங் பாஜகவில் இருந்து விலகி இருப்பது பாஜகவினர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளன.
பாஜகவில் இருந்து விலகல்
இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங், பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக, அபாங் 1978 முதல் 2004 வரை தொடர்ந்து வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த அவர், 2003 ல் மீண்டும் முதல்வரான பிறகு தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார்.
மீண்டும் பாஜக
2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். இதையடுத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார் ஜெகாங் அபாங்.
மக்கள் ஆதரவு இல்லை
கடந்த 4 ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்த அவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்போது விலகியுள்ளார். 2014 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மக்களின் ஆதரவை பெற பாஜக தவறி விட்டது. அதிகாரத்தை கைப்பற்றும் கட்சியாக பாஜக விளங்கி வருகிறது என்று விமர்சனம் செய்துள்ள முன்னாள் முதல்வர் ஜெகாங் அபாங்
|
குற்றச்சாட்டு
பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கொள்கைகளை தற்போது பின்பற்றுவதில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.