டெல்லி: சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவராக கெஜ்ரிவால் தேர்வு!
டெல்லி: டெல்லி சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக கெஜ்ரிவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி சட்டமன்றத்திற்கான 70 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பெற்று இரண்டாவது மிகப்பெரிய கட்சியாக உள்ளது.
அக்கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் யாரும் அரசு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவும், ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவதில்லை. அதே நேரத்தில் எந்த கட்சியிடமும் ஆட்சி அமைக்க ஆதரவும் கோரப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

32 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாரதிய ஜனதாவுக்கு ஆட்சி அமைக்க தனி மெஜாரிட்டி கிடைக்காததால், எதிர் கட்சியாக அமர்வோம் என்று பாஜகவின் டெல்லி பொறுப்பாளர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இதனால், டெல்லியில் புதிய அரசு அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கூடிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பெற்ற 28 எம்.எல்.ஏ.க்களும், டெல்லி சட்டமன்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்வு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications