கெஜ்ரிவாலுக்கு “டீ” கொடுத்த மோடி... ஆனால் பதவியேற்பில் பங்கேற்க மாட்டார்!
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சியின் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10.15 மணியளவில் கெஜ்ரிவால் டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள பிரதமர் மோடி இல்லத்திற்கு சென்றார். அவருடன் துணை முதல்வராக பதவியேற்க இருக்கும் மணிஷ் சிசோடியாவும் உடன் சென்றார்.

அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த மோடி, தேநீர் விருந்து அளித்தார். தொடர்ந்து அரைமணி நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர், அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமரிடம் பிப்ரவரி 14 ஆம் தேதியன்று நடைபெறும் முதல்வர் பதவியேற்புக்கு வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் எளிய முறையில் பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்துள்ளார். ஆடம்பரம் எதுவும் வேண்டாம் என ஒவ்வொரு செயல்பாட்டிலும் காட்டி வருகிறார்.
மேலும் எவ்வித பகைமைக்கும் இடம் கொடுக்காமல் பா.ஜ.கவை சேர்ந்த அமைச்சர்களும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என நேற்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கினையும் சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மணிஷ் சிசோடியா, "கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்ள மாட்டார்.
பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மகாராஷ்டிராவில் விழா ஒன்றில் பங்கேற்பதாக ஏற்கனவே பிரதமர் தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதால் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
-
புதினின் சீக்ரெட் ஆஃபர் கருப்புத் தங்கம்! உங்க வீட்டு கிச்சன் வரை ஊடுருவும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் -
ஜனநாயகன் படத்தை இன்று பார்வையிடும் மறு தணிக்கை குழு.. விஜய்க்கு பெரிய ட்விஸ்ட் இருக்கு -
ஈரான் - அமெரிக்கா போருக்கு நடுவே.. யுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு.. ஆலோசித்தது என்ன? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications