ஹரியானாவைக் குறி வைக்கும் கெஜ்ரிவால்... 'கெளரவக் கொலையாளர்களை' வசீகரிக்க திட்டம்!
டெல்லி: டெல்லியில் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து அடுத்து அருகில் உள்ள ஹரியானாவையும் கைப்பற்ற களம் குதித்துள்ளது ஆம் ஆத்மி. இந்த மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அனைத்து 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
ஹரியானாவில் நடைபெறும் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்த கையோடு, ஹரியானாவில் உள்ள 21 மாவட்டங்களிலும் படு வேகமாக கிளைகளையும் திறந்து படு ஜரூராக பணிகளைத் தொடங்கி விட்டது ஆம் ஆத்மி.
ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் தங்களது முதல்வர் வேட்பாளராக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபலமான அரசியல் திறனாளாய்வருமான யோகேந்திர யாதவை ஆம் ஆத்மி அறிவிக்கவுள்ளது. யாதவ்தான், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கொள்கை வகுப்பாளராக இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.

படுவேகமாக தீரும் உறுப்பினர் சேர்க்கை பாரம்
ஹரியானாவில் உறுப்பினர் சேர்க்கை படு வேகமாக நடந்து வருகிறது. அங்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வேகமாக விற்றுத் தீர்ந்ததால் ஆம் ஆத்மிக்கே வியப்பாகி விட்டதாம்.

கெளரவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டம்
ஹரியானாவின் மிக முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று கெளரவக் கொலை. அங்கு இத்தகைய கொலைகள் சர்வ சாதாரணம். எனவே முதலில் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க தீர்மானித்துள்ளது ஆம் ஆத்மி.

சாதித் தலைவர்கள், இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை
கெளரவக் கொலைகளுக்கு உத்தரவிடுவது சாதித் தலைவர்கள்தான். கிராமத்தில் இவர்கள் வைத்ததுதான் சட்டம். எனவே முதலில் இவர்களைப் பார்த்துப் பேசி அவர்களுக்கு அறிவுறுத்தல்களை கொடுத்து தங்களுக்கு ஆதரவாகத் திருப்ப முயற்சிக்கிறது ஆம் ஆத்மி. மேலும் இளைஞர்களையும் அது சந்தித்து காதல் திருமணம் ஆகியவற்றால் ஏற்படும் நன்மைகளை விளக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

ஆதரிக்க மாட்டோம்
அப்படியானால் கெளரவக் கொலையாளிகளை தங்களுக்கு ஆதரவாக திருப்பி அவர்களது கோரிக்கைளை நிறைவேற்ற ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதிலளித்துள்ளார் யோகேந்திர யாதவ். அவர்களுடன் பேச்சுவார்த்தைதான் நடத்தப் போகிறோமே தவிர அவர்களது செயல்களை ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆனால் ஒரே கோத்திரத்திற்குள் திருமணம் நடத்த ஆதரவு
ஆனால், ஒரே கோத்திரத்திற்குள், உட்பிரிவுக்குள்தான் திருமணம் நடைபெற வேண்டும் என்று ஹரியானாவில் பெரும்பான்மையாக உள்ள ஒட்டுமொத்த ஜாட் சமுதாயமும் விரும்பினால் அதை ஆதரிப்பதில் தவறில்லையே என்று கேட்டுள்ளார் யாதவ்.

காங்கிரஸ் கண்டனம்
ஆனால் ஆம் ஆத்மியின் திட்டத்திற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி மாஜிக் ஹரியானாவில் எடுபடுமா
டெல்லி பெரும்பாலும் நகர்ப்புற வாக்காளர்கள் நிரம்பிய சிறிய மாநிலம். ஆனால் ஹரியானா அப்படி இல்லை, பெரும்பாலும் கிராமங்கள்தான். சாதிதான் இங்கு முக்கியமாக பார்க்கப்படும். எனவே டெல்லியில் நடந்த மாயாஜாலத்தை ஹரியானாவிலும் ஆம் ஆத்மி நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications