தேர்தல் வெற்றி: மனைவி சுனிதாவை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்
டெல்லி: தனக்கு எப்பொழுதும் துணையாக நிற்கும் மனைவி சுனிதாவுக்கு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. தனது தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்ட ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் மன்னித்து மீண்டும் முதல்வராக்கியுள்ளனர்.

வெற்றியை அடுத்து கட்சியினர், ஆதரவாளர்கள் கெஜ்ரிவாலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது கெஜ்ரிவால் தன் அருகே நின்ற தனது மனைவி சுனிதாவை கட்டிப் பிடித்து தனக்கு துணையாக நிற்பதற்காக நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
எப்பொழுதும் எனக்கு துணையாக இருப்பதற்கு நன்றி சுனிதா. வெற்றி பெற்றதற்கு பிறகு முதலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய வருவாய் துறைக்கு தேர்வு செய்யப்பட்ட கெஜ்ரிவாலும், சுனிதாவும் முசோரியில் உள்ள பயிற்சி அகாடமியில் சந்தித்து காதலில் விழுந்து திருமணம் செய்து கொண்டனர்.
சுனிதா இல்லாமல் தன்னால் எதையுமே சாதித்திருக்க முடியாது என்று கெஜ்ரிவால் கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications