ஆசிரமப் பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கு – ஆசாராம் பாபு மகனுக்கு 3 வார ஜாமீன்!
Subscribe to Oneindia Tamil
சூரத்: ஆசிரமத்தில் இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த பிரபல சாமியார் அசராம் பாபு சிறுமி பலாத்கார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மகனான நாராயண் சாய் சூரத் ஆசிரமத்தில் தங்கி இருந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக சூரத் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் நாராயண்சாய், தனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது இருப்பதால் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கோரி குஜராத் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட்டு நீதிபதி பரேஷ் உபாத்தியா அவருக்கு 3 வாரகாலத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications