மத்திய பிரதேச ஆசிரமத்தில் ஆசாராம் உதவியாளர் மர்ம சாவு
போபால்: மத்திய பிரதேசத்தில் சாமியார் ஆசாராம்பாபுவின் உதவியாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமியார் ஆசாராம் பாபு. யோகா, ஆன்மீக பாடங்கள் நடித்துவதற்காக வடமாநிலங்களில் ஆசிரமங்களை உருவாக்கினார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் தங்கி இருந்த உ.பி.சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் மற்றும் பெண் சீடரும் கைதானார்கள்.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் ஷகிந்வாரா ஆசிரமத்தில் தங்கி நிர்வாகத்தைக் கவனித்து வந்த ஆசாராம் பாபுவின் உதவியாளர் பதிராம் திகாரியா (35) என்பவர் திடீர் என்று சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அவர் பாம்பு கடித்து இறந்ததாக ஆசிரமத்தினர் தெரிவித்தனர். ஆனால், கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக குடும்பத்தினர் போலீசில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே அஸ்ராம்பாபு பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சிறை சென்றுள்ள நிலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர் அவரது ஆசிரம நிர்வாகிகள்.