மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலராக அசோக் பிரசாத் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய சிறப்பு செயலராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அசோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சக சிறப்பு செயலராக இருந்த பிரகாஷ் மிஷ்ரா சிஆர்பிஎஃப் தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு அசோக் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவை கவனிக்கும் மிக முக்கியப் பொறுப்பை அவர் மேற்கொள்வார். 1979ஆம் ஆண்டு ஆந்திரா கேடரைச் சேர்ந்த அசோக் பிரசாத், ஐ.பி அமைப்பின் சிறப்பு இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் மாநில டிஜிபியாகவும் அசோக் பிரசாத் பணியாற்றினார்.












Click it and Unblock the Notifications