பந்தல்காண்ட் குரல் டெல்லிக்கு கேட்கிறது.. லக்னோவுக்கு கேட்கவில்லையே.: ராகுல் காந்தி
ஹமிர்புர்: வறட்சி மிகுந்த பந்தல்காண்ட் மக்களின் குரல் டெல்லிக்கு கேட்கும் நிலையில் மாநில தலைநகர் லக்னோவுக்கு கேட்கவில்லையே என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பந்தல்காண்ட் பகுதியில் இன்று நடைபெற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு அமையாது போனால் உங்கள் பகுதி வளர்ச்சி அடைய முடியாது. இந்த மாநிலமும் வளர்ச்சி அடையாது.

பந்தல்காண்ட்- டெல்லி இடையே ரயில்வே இணைப்பு மட்டும் நமக்கு தேவை இல்லை. இந்த பந்தல்காண்ட்டுக்கும் உலக நாடுகளுக்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட வேண்டும். பெங்களூரைப் போல பந்தல்காண்ட் பிரதேசத்தை மாற்றுமாறு உங்களை ஆளும் மாநில அரசை கேளுங்கள்..
வறட்சியால் வாடும் பந்தல்காண்ட் பிரதேச மக்கள் பல ஆண்டுகாலம் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது கோரிக்கை டெல்லிக்கு கூட கேட்டுவிட்டது. ஆனால் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவுக்கு கேட்கவில்லையே ஏன் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பந்தல்காண்ட் பிரதேசத்தின் ஜான்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பந்தல்காண்ட் பிரதேசத்துக்கான சிறப்பு நிதியை அரசியல்வாதிகள் தங்களது பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார்கள் என்று சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications