கனமழையின் கோரத்தாண்டவம்... அஸ்ஸாமில் 140 வன விலங்குகள் வெள்ளத்தில் மூழ்கி பலி
அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டிவரும் கனமழையால் மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. அதனால் உலகப்புகழ்பெற்ற காசிரங்க தேசிய வனவிலங்கு பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் 140 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்
குவாஹாத்திஅம்: அஸ்ஸாம் மாநிலத்தில் கொட்டிவரும் கனமழையால் அம்மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. அதனால் உலகப்புகழ்பெற்ற காசிரங்க தேசிய வனவிலங்கு பூங்கா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதில் 140 விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவாரமாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் வற்றாத பிரமாண்ட ஜீவநதியான பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல ஆறுகளில், மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், மாநிலத்தில் எல்லா மாவட்டங்களையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.
அஸ்ஸாமின் முக்கிய பாலங்கள், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது. மேலும், கோல்காட் மற்றும் நகவுன் மாவட்டங்களை ஒட்டியுள்ள புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகமான காசிரங்கா தேசியப் பூங்கா முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
அங்கு பராமரிக்கப்பட்டுவரும் விலங்குகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றது. ஆனாலும் நிலைமை கைமீறிப்போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சுமார் 500 சதுர கிலோமீட்டர் அளவுள்ள இந்த பூங்காவின் 80 சதவீதம் பகுதி வெள்ளத்தால் மிதக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்த வனவிலங்கு காப்பகத்தில் உள்ள சிங்கம், புலி, அரியவகை ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் போன்றவை வெள்ளத்தில் மூழ்கி இறக்க வாய்ப்புள்ளது.
மேலும், அந்த விலங்குகள், மழைவெள்ள நீரில் நீந்தியபடி, அருகாமையில் உள்ள ஊர்களுக்குள் புகுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளதால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
இதுவரை வெள்ளத்தில் மூழ்கி இரு யானைகள், 10 காண்டா மிருகங்கள், 120-க்கும் மேற்பட்ட சதுப்பு நில மான்கள், காட்டெருமைகள், முள்ளம்பன்றி என மொத்தம் 140 வன விலங்குள் உயிரிழந்துள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications