லஞ்ச் பாக்ஸில் மாட்டுக்கறி.. பள்ளிக்கு வந்த மாணவனையும் தாயையும் கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் மதிய உணவாக மாட்டுக்கறி எடுத்துச் சென்ற மாணவர் திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மாட்டுக்கறி சாப்பிடுமாறு சக மாணவர்களை அந்த மாணவர் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த மாணவர் மட்டுமின்றி, அவரது தாய் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததற்காகத் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் கூட நடந்து வருகிறது. இந்தியாவில் மாட்டுக்கறி வைத்திருக்கத் தடை எதுவும் இல்லாத நிலையில், இது போன்ற சம்பவங்கள் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

Assam School issue Beef Controversy

அசாம் சம்பவம்

இதற்கிடையே அசாம் மாநிலம் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள ஹப்ராகாட் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடந்த ஒரு சம்பவமும் அதைத் தொடர்ந்து நடந்த கைதும் பேசுபொருள் ஆகியுள்ளது. அதாவது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், தனது தாயார் சமைத்துக் கொடுத்தனுப்பிய மாட்டுக்கறி உணவைத் தனது டிஃபன் பாக்ஸில் எடுத்து வந்துள்ளார்.

என்ன நடந்தது

அங்குள்ள தனது வகுப்பறையில், இரண்டு இந்து சக மாணவர்களை அந்த மாட்டுக்கறி உணவைச் சாப்பிடுமாறு அவர் வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவர் மட்டும் இந்தச் செயலில் ஈடுபடவில்லை.. அவருடன் மேலும் நான்கு மாணவர்களும் சேர்ந்து கொண்டு, அந்த இரண்டு இந்து மாணவர்களையும் சூழ்ந்து கொண்டு மாட்டுக்கறியைச் சாப்பிடச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் சனிக்கிழமை காலை வெளியே தெரியவர, பாதிக்கப்பட்ட இரண்டு இந்து மாணவர்களின் குடும்பத்தினரும் உடனடியாக கிருஷ்ணாய் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து களமிறங்கிய போலீசார், சம்பந்தப்பட்ட அந்த மாணவனையும், அவனுக்கு மாட்டுக்கறி சமைத்துக் கொடுத்து அனுப்பிய அவனது தாயார் நூர் சாகிதா பேகத்தையும் சனிக்கிழமை அதிரடியாகக் கைது செய்தனர். அவர்கள் இருவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

குற்றச்சதி, மத உணர்வுகளைத் தூண்டி புண்படுத்துதல் ஆகிய கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனும், அவனது தாயாரும் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தின் போது, மாட்டிறைச்சியைச் சாப்பிட வற்புறுத்திய அந்த மாணவனுக்கு உடந்தையாக இருந்த மற்ற நான்கு மாணவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடந்த கிருஷ்ணாய் மற்றும் கோல்பாரா பகுதிகள் கணிசமான முஸ்லிம் மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும், இந்துக்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. மிக எளிதாக வகுப்புவாத மோதல் ஏற்படும் ஒரு இடமாகவும் இருக்கிறது. இதன் காரணமாகவே போலீசார் உடனடியாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. பள்ளிக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ்

இருப்பினும், அது மோதலாக மாறும் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர, கோல்பாரா மாவட்ட ஆணையர் மற்றும் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரடியாக அந்தப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தனர். மேலும், பதற்றம் அதிகரிக்காமல் அமைதியை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+