என்னங்க இது.. 11 வருடத்தில் 25 முறை வெவ்வேறு ஆணுடன் ஓடிப்போன மனைவி.. காத்திருக்கும் கணவர்- அதிர்ச்சி
கவுகாத்தி: அசாமில் பெண் ஒருவர் 11 வருட மண வாழ்க்கையில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் ஓடிப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் உருக்கமாக பேட்டி அளித்து இருக்கிறார்.
வடிவேல் போலீசாக இருக்கும் காமெடி ஒன்றில் பெண் ஒருவர் மாட்டு ரவி, சாரை பாம்பு என்று பல ஆண்களை திருமணம் செய்துவிட்டு கடைசியில் போலீசில் வந்து புகார் கொடுப்பார். இந்த காமெடியில் கடைசியில் உண்மையான கணவன் வந்து போலீசிடம் இருந்து தனது மனைவியை மீட்டு செல்வார். படத்தில் காமெடியாக நடந்த இந்த விஷயம் எல்லாம் நிஜத்தில் நடக்குமா என்று பலர் நினைத்ததுண்டு .
அப்படி உண்மையிலேயே ஒரு சம்பவம்தான் தற்போது அசாமில் நடந்து இருக்கிறது. அசாமின் திங் லாகர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டை விட்டு ஒவ்வொரு முறையும் ஓடிப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம்
அசாமை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 2010ல் திருமணம் நடந்து உள்ளது. அதே ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு முன் இந்த பெண் சிலருடன் காதலில் இருந்துள்ளார். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் அந்த பெண்னை இளைஞர் திருமணம் செய்து கொண்டுள்ளார். தொடக்கத்தில் இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாகவே சென்று இருக்கிறது. மன வாழ்க்கையில் இவர்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

குழந்தை
முதல் குழந்தை பிறந்த பின்புதான் அந்த பெண்ணின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது, அவரின் நடத்தைகள் வெகுவாக மாறி உள்ளன. திடீரென போனில் நீண்ட நேரம் ஆண்களுடன் பேச தொடங்கி இருக்கிறார். பேஸ்புக்கில் பல ஆண்களுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொள்ள தொடங்கி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் இது குறித்து விசாரித்து உள்ளார். இவங்க எல்லாம் ஜஸ்ட் நண்பர்கள்தான் என்று சமாளித்த அந்த பெண் தொடர்ந்து இப்படி சாட்டிங்கில் பல ஆண்களுடன் ஈடுபட்டு வந்து இருக்கிறார்.

ஓடிப்போனார்
இந்த நிலையில்தான் முதல் குழந்தை பிறந்து சில வாரங்களிலேயே அந்த பெண் வீட்டை விட்டு ஓடிப்போய் இருக்கிறார். பேஸ்புக்கில் பழகிய காதலன் ஒருவருடன் வீட்டை விட்டு ஓடிப்போய் இருக்கிறார். அதோடு அந்த நபருடன் சில வாரங்கள் தங்கிவிட்டு பின் வீட்டிற்கு உடனே திரும்பி வந்துள்ளார். கணவனிடம் மன்னிப்பு கேட்டு அவருடன் இருப்பேன் என்று கூறியுள்ளார். முதல் தடவை என்பதால் கணவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஷாக் மன்னிப்பு
ஆனாலும் மனைவி திருந்துவிடுவார். இனி சரியாக இருப்பார் என்று வீட்டில் சேர்த்து இருக்கிறார். இரண்டு வீட்டு குடும்பத்தாரும் சேர்ந்து சமாதானம் பேசி அந்த பெண்ணை குடும்பத்தோடு சேர்த்து வைத்துள்ளனர். அந்த பெண்ணும் அடுத்த மூன்று மாதங்களுக்கு நன்றாக இருந்திருக்கிறார். இவர்கள் குடும்பத்தில் பெரிதாக இருவருக்கும் மோதல் எல்லாம் வந்தது கிடையாது. இவர்களின் உறவும் நன்றாகவே இருந்திருக்கிறது.

ஆனால் மீண்டும்
ஆனால் மூன்று மாதம் கழித்து மீண்டும் அந்த பெண் வீட்டை விட்டு ஓடிப்போய் உள்ளார். இந்த முறை பக்கத்து ஊரை சேர்ந்த நபருடன் ஓடிப்போய் உள்ளார். இதனால் கணவர் மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். பின் மனைவி சரியாக ஒரு மாதம் கழித்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். ஆனால் அப்போதும் கணவர் எதுவும் சொல்லாமல் அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டார். மனைவி சரியாகிவிடுவார் என்று நம்பி கணவர் அவரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஒரே வருடத்தில் 4 முதல் 5 முறை
பின்னர் ஒரே வருடத்தில் அடுத்தடுத்து ஓடிப்போய் இருக்கிறார். அதிலும் 2015ம் வருடம் ஒரே வருடத்தில் 5 முறை ஓடிப்போய் உள்ளார். சில சமயம் ஒரு மாதத்தில் திரும்பி வருவது, சில சமயம் பல மாதங்கள் வீட்டிற்கு வராமல் எங்கயாவது இருப்பது என்று இவர் ஏமாற்றி வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஒரே ஆணுடன் செல்லாமல் வெவ்வேறு ஆண்களுடன் இவர் வெளியே செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இத்தனை வருடங்களில் 25 முறை இவர் ஓடிப்போய் உள்ளார்.

எப்படி எஸ்கேப் ஆகிறார்
அதிகபட்சம் இவர் வீட்டில் 3 மாதம் கூட தங்க மாட்டார் என்று கூறப்படுகிறது. ஏன் இப்பட்டி ஓடிப்போகிறார், ஏன் திரும்பி வருகிறார் என்றும் தெரியவில்லை. ஒவ்வொரு முறை திரும்பி வந்ததும் கணவரிடம் அது தொடர்பாக இந்த பெண் மன்னிப்பு கேட்கிறார். இதை ஏற்றுக்கொண்டு அவரும் மனைவியை மீண்டும் வீட்டில் சேர்த்துக் கொள்கிறார். 40 வயதான நிலையில் இப்போதும் அந்த பெண் தொடர்ந்து ஓடிப்போவது வழக்கமாக நடந்து வருகிறது.

கணவர் எதுவுமே சொல்லவில்லை?
ஒவ்வொரு முறையும் கடைக்கு போகிறேன், ரேஷன் கடைக்கு செல்கிறேன், துணி தைக்க கொடுக்கிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறிவிட்டு இவர் எஸ்கேப் ஆவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். கணவரும் வேறு வழியில்லாமல் இவரை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இந்த முறை மீண்டும் ஓடிப்போனவர் கடந்த சில வாரமாக எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. வீட்டில் ஒரு கை குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் தவித்துக்கொண்டு இருக்கின்றது. ஆனாலும் இவர் எங்கே என்று தெரியாமல் ஓடிப்போன மனைவிக்காக வீட்டிலேயே கணவர் காத்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications