வெள்ளத்தோடு சேர்ந்து கேரளாவை உலுக்கும் நிலச்சரிவு.. 22 பேர் பலியான சோகம்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளத்தில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளநீரில் சிக்கி 22 பேர் பலியாகிவிட்டனர்.

கடவுளின் தாய் வீடு என்ற கூறப்படும் கேரள மாநிலத்தில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்கள் நீரில் மூழ்கின.

இதையடுத்து வெள்ள அபாயத்தில் உள்ள கிராம மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளை இழந்த மக்கள்

வீடுகளை இழந்த மக்கள்

கேரளத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரெட் அலர்ட்

ரெட் அலர்ட்

ஓரிரு நாட்கள் விட்டிருந்த மழை மீண்டும் தொடங்கியது. இதனால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர்.

கொச்சி விமான நிலையம் மூடல்

கொச்சி விமான நிலையம் மூடல்

கேரள மாநிலத்தில் நேற்றைய தினம் மீண்டும் மழை பெய்தது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

22 பேர் பலி

22 பேர் பலி

மலப்புரம் மாவட்டத்தில் பெருங்காவு கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதேபோல் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, பத்தினம்திட்டா ஆகிய பகுதிகளில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு 14 பேர் பலியாகினர். இதனால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நேற்று மட்டும் 22 பேர் பலியாகிவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+