அதிகரிக்கும் ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல்.. உள்துறை அமைச்சருடன் சுஷ்மா அவசர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் காங்கோ நாட்டு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஹைதராபாத்தில் ஒரு நைஜீரிய மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனும், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதலால் ஆப்பிரிக்க நாடுகளில் அதிர்ச்சி அலை பரவியுள்ளது. காங்கோ தலைநகர் கின்ஹாசாவில் இந்தியர்களுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இந்தியர்களின் கடைகள் தாக்கப்பட்டன. இந்தியர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள்.

மேலும் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர்களும் கூட இந்தியாவில் ஆப்பிரிக்கர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருவது குறித்து அதிர்ச்சியும், கோபமும் வெளிப்படுத்தியிருந்தனர். இதையடுத்து மத்திய அரசு சுதாரித்துள்ளது. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோருடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, டெல்லியில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளைஞர் மசுன்டா ஆலிவரின் உடலை காங்கோவுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ராஜ்நாத் சிங்குடன் பேசியது குறித்து சுஷ்மா கூறுகையில், நான் ராஜ்நாத் சிங், ஜங் ஆகியோருடன் பேசினேன். ஆலிவர் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக இருவரும் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜந்தர் மந்தரில் ஆப்பிரிக்க நாடுகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுடப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களைச் சந்தித்து சமாதானப்படுத்துமாறு இணை அமைச்சர் வி.கே.சிங், செயலாளர் அமர் சின்ஹா ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார் சுஷ்மா.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications