சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் கவனத்துக்கு!
சபரிமலை; சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமியை தரிசனம் செய்ய முன்பதிவு செய்த பக்தர்கள் அங்கு வரும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கேரள காவல்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. அவற்றை இப்போது பார்ப்போம்.
கேரள காவல்துறை வெளியிட்ட அறிக்கையில். பம்பையை வெள்ளம் காரணமாக அடிப்படை வசதிகள் முகாம் செயல்படவில்லை. புதிய அடிப்படை வசதிகள் முகாம் நிலக்கலில் செயல்படுகிறது.

நிலக்கலை அடைவதற்கு முன், உங்கள் 48 மணிநேர செல்லுபடியாகும் டிராவல்-கம்-தரிசன டிக்கெட்டை கேரள காவல்துறை நிர்வகிக்கும் www.sabarimalaq.com அல்லது கேரள மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் (கே.எஸ்.ஆர்.டி.சி) www.keralartc.com இலிருந்து டவுன்லோடு செய்யுங்கள்
உங்கள் வாகனங்களை நிலக்கலில் நிறுத்துங்கள். பம்பயை அடைய கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் ஏற டிக்கெட்டைப் பயன்படுத்துங்கள், தரிசனம் செய்தபின் அதே டிக்கெட்டைப் பயன்படுத்தி கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளில் பாம்பாவிலிருந்து நிலக்கலுக்கு திரும்பலாம். கே.எஸ்.ஆர்.டி.சி சேவையைப் பயன்படுத்தி நேரடியாக பம்பையை அடைந்தவர்களும் இந்த டிக்கெட்டை எடுக்க வேண்டும்.
தரிசனத்திற்குப் பிறகு, கால்நடையாக சபரிமலை அடையும் பக்தர்கள் நிலக்கலை அடைய பம்பாவில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி கவுண்டர்களில் இருந்து டிக்கெட் எடுக்கலாம். ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் நிலக்கலுக்கு வரும் யாத்ரீகர்கள் கிடைக்கும் மற்றும் முன்னுரிமையின் அடிப்படையில் நிலக்கலில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி கவுண்டர்களிடமிருந்து டிக்கெட் பெறலாம்.
சபரிமலையில் புதிய டிராவல்-கம்-தரிசன ஏற்பாட்டிற்கு பக்தர்களை அன்புடன் வரவேற்கிறோம், அதிகபட்சமாக பக்தர்கள் ஐயப்ப பகவானை தரிசனம் செய்து 48 மணி நேரத்தில் திரும்பி வர முடியும் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications