ஸ்டார் ஹோட்டல்களில் கூட்டம் நடத்த… சொகுசு விமானப் பயணம் செய்ய தடை: சிக்கன நடவடிக்கையாம்

மத்திய அரசு துறைகளின் நிதி ஆலோசகர்களுடன் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நிதி பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு துறைகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட அதிகமாக செலவிட கூடாது. அனைத்து மத்திய அரசு துறைகளும் புதிய வாகனங்கள் வாங்கக் கூடாது.
உள்நாட்டு விமான பயணத்தின் போது அதிகாரிகள் சாதாரண வகுப்பில்தான் பயணிக்க வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தான் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டும்.
வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் அரசு கூட்டங்களை தவிர பிற மாநாடுகள், ஆலோசனைக் கூட்டங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்த தடை விதிக்கப்படுகிறது.
இந்த சிக்கன நடவடிக்கைகள் அனைத்தும் அகில இந்திய வானொலி, அகில இந்திய மருத்துவ நிறுவனம் ஆகிய அரசு தன்னாட்சி அமைப்புகளுக்கும் பொருந்தும்.
அரசின் திட்டமிடாத செலவை 10 சதவீதம் குறைக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த 2008-09 ஆம் ஆண்டிலும் கடந்த நவம்பர் மாதத்திலும் மத்திய அரசு இது போன்ற சிக்கன நடவடிக்கையை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்த சிக்கன நடவடிக்கை அதிகாரிகளுக்கு மட்டும்தானா? அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் கிடையாதா பாஸ்? என்பது யாரோ கேட்பது காதில் விழுகிறதா?












Click it and Unblock the Notifications