அதெப்படி விமர்சிக்கலாம்? டெல்லி இமாம் மீது உ.பி. அமைச்சர் ஆசாம் கான் பாய்ச்சல்!
ராம்பூர்: லவ் ஜிகாத்தை எதிர்த்துக்கும் இந்துத்துவா அமைப்புகள் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமாம் சையத் அகமது புகாரியின் மகன் இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டது பற்றி மவுனமாக இருப்பது ஏன் என்று சர்ச்சைக்குரிய உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி இமாம் சையத் அகமது புகாரி அண்மையில் உ.பி. அமைச்சர் ஆசாம் கான் தொகுதியில் மாடுகள் பகிரங்கமாக வெட்டப்படுகின்றன. ஆனால் அவருக்கு எதிராக எவரும் பேச முடியாத நிலை உள்ளது. ஆசாம் கான் மீதான அச்சத்தால் யாரும் பேசமாட்டார்கள் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து ஆசாம் கான் அளித்துள்ள பதில்:
சையத் அகமது புகாரி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏஜெண்ட். அவரது மகன் இந்துப் பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
லவ் ஜிகாத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கின்றன. ஏனெனில் சையத் புகாரி, இந்துத்துவா அமைப்புகளுடன் கை கோர்த்து கொண்டு செயல்படுகிறார். ஆனால் என் மகன் இந்து பெண்ணை திருமணம் செய்திருந்தால் அரசியலில் பிரளயமே ஏற்பட்டிருக்கும்.
இவ்வாறு ஆசாம் கான் கூறினார்.