For Daily Alerts
Just In
நாடாளுமன்றத் தேர்தல்: மேற்கு வங்கத்திற்கு இடம் மாறும் அசாருதீன்!
கொல்கத்தா: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மொரதா பாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அசாருதீன் மேற்குவங்காள மாநிலத்தில் போட்டியிடுவார். முக்கியமாக கொல்கத்தாவில் ஈடன் கார்டன் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அசாருதீனே தெரிவித்து உள்ளார்.
Comments
English summary
Former Indian cricket team captain and current Lok Sabha MP Mohammed Azharuddin is likely to contest the 2014 LS elections from a constituency in West Bengal.
Story first published: Wednesday, January 29, 2014, 13:44 [IST]