For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.,யில் ரயிலில் பிறந்த குழந்தை கழிவறையில் தவறி விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஆச்சரியம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரயிலில் பிறந்த குழந்தை கழிவறையில் தவறி விழுந்து பின்னர் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி - தனக்பூர் இடையேயான பயணிகள் ரயிலில் பயணம் செய்தவர் புஷ்பா. இவர் சித்தாபூரில் உள்ள கண் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார். கர்ப்பிணியான இவருக்கு ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே பிரசவ வலி எடுத்துள்ளது.

 Baby born in moving train slips down toilet

இதையடுத்து ரயிலிலே புஷ்பாவுக்கு குழந்தை பிறந்தது. ரயிலின் கழிவறையில் பிறந்த இந்த குழந்தை எதிர்பாராவிதமாக தவறி கழிவறைக்குள் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து.

இந்நிலையில்,போஜிபுரா ரயில்வே நிலையத்தில் ரயில் நின்ற போது அவருக்கு குழந்தை பேற்று வலி ஏற்பட்டதும், ரயில் கிளம்பி 500 மீட்டர் சென்றதும் அவசர சங்கிலியை இழுத்து ரயிலை பயணிகள் நிறுத்தியதாகவும், தற்போது தாயும்,சேயும் நலமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கழிவறைக்குள் விழுந்த அக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த சம்பவம் ரயிலில் பயணித்தவர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள்ளது.

English summary
The woman gave birth to a girl child in the toilet but the newborn accidentally slipped through the toilet
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X