பதாவ்ன் சகோதரிகள் சீரழிக்கப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளனர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சகோதரிகள் உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் மாவட்டம் கத்ரா கிராமத்தில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற 14 மற்றும் 15 வயது சகோதரிகள் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் 2 கான்ஸ்டபிள்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு உயிருடன் மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளவர்களின் தலைமுடி, ரத்தம், நகம் மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications