மாட்டிறைச்சி தடை உத்தரவு மாநில அரசை கட்டுப்படுத்தாது: சித்தராமையா அதிரடி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய கூடாது என்ற மத்திய அரசின் உத்ததரவு, மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தனது சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுக்க தடை செய்வதாக அறிவித்தது.

இதுகுறித்து, அவர் கூறுகையில், மத்திய அரசால் மாநில உரிமைகளில் தலையிட முடியாது என்றார். மேலும் மத்திய அரசின் சட்ட திருத்தத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து படித்து பார்த்துவிட்டு கருத்து கூறுவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் மத்திய அரசின் அறிக்கை தங்களுக்கு வரவில்லை என்றும், அவர் கூறியுள்ளார். பிரனாயி விஜயனும் மத்திய அரசிடமிருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications