முல்லை பெரியாறு விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பந்த்!
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இன்று கேரளாவில் பந்த் நடத்தப்படுகிறது.
முல்லை பெரியார் அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் கடந்த சில வருடங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால் அப்படி உயர்த்த முடியாது என கேரள அரசு கூறிவந்தது. இந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் அதிரடியாக நேற்று அளித்த தீர்ப்பால் இன்று கேரளாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள முல்லை பெரியாறு அணையை நம்பித்தான் தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயமே உள்ளது. கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து அதிகரிக்க முடியாது என முரண்டு பிடித்ததால் அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் லோதா தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. இதில் 2006ம் வருடம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் உத்தரவிட்டது.
புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்தது.
இந்த உத்தரவு கேரளாவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அணை அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை போராட்டக்குழு சார்பில் போராட்டம் நடந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்து இன்று 8ம் தேதி கேராளவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க கேரள முதல்வர் உம்மன்சாண்டி சார்பில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது.
முல்லை பெரியாறு அணை பாதுகாப்புக் குழு அறிவித்துள்ள இந்த பந்திற்கு தங்களது கட்சி ஆதரவு அளிக்காது என்று மா.கம்யூ கட்சி அறிவித்துள்ளது. இந்த பிரச்சனைக்கு மா கம்யூ கட்சி தனியாக போராட்டம் நடத்தும் என இடுக்கி மாவட்ட மா கம்யூ செயலாளர் மணி தெரிவித்தார்.
இதுகுறித்து கேரள எதிர்க்ட்சி தலைவர் அச்சுதானந்தன் கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு விவகார தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில் உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும். இந்த வழக்கில் கேரள தரப்பில் முறையாக வாதிடாததே தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications