ஆந்திராவின் 10 மாவட்டங்களில் பந்த் : வெறிச்சோடிய சாலைகள்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானாவுடன் மேலும் 2 மாவட்டங்கள் இணைக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 10 மாவட்டங்களில் இன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் முழு அடைப்பு அனுமானிக்கப் படுகிறது.
ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவிற்கு சீமாந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, அங்கு தினந்தோறும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய தெலுங்கானா மாநிலத்துடன் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அனந்தபூர், கர்னூல் ஆகிய 2 மாவட்டங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

வெறிச்சோடிய சாலைகள்...
அதன்படி ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் உள்ள உள்ள 10 மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடை பெற்ரு வருகிறது. பேருந்துகள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

போக்குவரத்து ஊழியர்கள்....
சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் 10 ஆயிரம் பேருந்துகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. கிட்டத்தட்ட 58 ஆயிரம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.

மருத்துவர்கள்....
சுமார் 3,500 மருத்துவர்கள் இந்த பந்த்தில் கலந்து கொள்வதால் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்...
மேலும், இன்று அங்கு கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முழுமையாக மூடபட்டு உள்ளன. பள்ளி கல்லூரிகள் மூடபட்டு உள்ளன.ஆங்காங்கே மாணவர்கள் சாலை மறியல் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்வுகள் ரத்து....
பந்த் காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. வெறிச்சோடிய சாலைகளில் பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறந்து வைக்கப் பட்டுள்ளன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு....
இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தினால் தெலுங்கான பகுதில் மக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவு பாதிக்கபட்டு உள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications