For Daily Alerts
Just In
மதியம்வரை சட்டசபையில் இருந்தார்.. பெங்களூர் பாஜக எம்.எல்.ஏ மாரடைப்பால் சாவு
பெங்களூர்: கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ஜெகதீஷ் குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
பெங்களூர் நகரின் ஹெப்பால் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெகதீஷ் குமார் (பாஜக). கடந்த மூன்று வருடங்களாக சட்டசபை கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, சிறப்பாக செயல்பட்டு வந்தார்.
இன்று சட்டசபை கூட்டத்தில் பங்கேற்று மதியம், டீ குடித்துள்ளார். அப்போது லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் மாரடைப்பு காரணமாக ஜெகதீஷ் குமார் உயிரிழந்தார்.
மதியம்வரை சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏ உயிரிழந்த தகவல் கர்நாடக அரசியல்வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
Bangalore BJP MLA Jagadish Kumar dies due to heart attack.
Story first published: Monday, November 23, 2015, 18:48 [IST]