நுரை தள்ளிக் கிடக்கும் பெங்களூர் பெல்லந்தூர் ஏரி: கை கழுவிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
பெங்களூர்:பெங்களூரில் உள்ள பெல்லந்தூர் ஏரியில் வெள்ளை நுரை உருவாக அப்பகுதி மக்கள் அதிக அளவில் துவைக்கும் பவுடர் மற்றும் சோப் தான் காரணம் என கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பெல்லந்தூரில் இருக்கும் ஏரி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் ஏரி முழுவதும் வெள்ளை நுரையாக உள்ளது. ஏரி மாசுபட தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் தான் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த வாரம் பெல்லந்தூர் ஏரிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஏரியில் நுரை பொங்குவதற்கு தொழிற்சாலை கழிவுகள் அல்ல மாறாக அப்பகுதி மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் துவைக்கும் பவுடர் மற்றும் சோப் ஆகியவை தான் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ராமசந்திரா கூறுகையில்,
ஏரிக்கு அருகில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் மாதாமாதம் 4 கிலோ டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்து. இந்த டிடர்ஜென்ட் கலந்த நீர் ஏரியில் கலக்கும்போது நுரை உண்டாகுகிறது. ஏரி எப்படி மாசுபட்டது என்பது குறித்த விரிவான அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications