நம் தேசிய கீதம் 'வந்தே மாதரமாம்': பெங்களூர்வாசிகள் சிலரின் புத்திசாலித்தனத்தை என்ன சொல்ல?
பெங்களூர்: நாம் 68வது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ள இந்த தினத்தில் பெங்களூரில் உள்ள சிலருக்கு நம் தேசிய கீதம் கூட தெரியவில்லை.
இன்று நாட்டின் 68வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நாளையொட்டி யூடியூப் சேனலான இம்மார்டல் ட்ரீம்ஸ் பெங்களூரில் உள்ள மக்களிடம் இந்தியா குறித்து பல கேள்விகளை கேட்டது. அதற்கு மக்கள் அளித்த பதில்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
அந்த பதில்களை நீங்களே படித்து பார்த்து நொந்து கொள்ளுங்கள்
தேசிய கீதம்
நம் நாட்டின் தேசிய கீதம் எது என்ற கேள்விக்கு பலருக்கு பதிலே தெரியவில்லை. ஏதோ கேட்கக் கூடாத கேள்வியை கேட்டது போன்று விழித்தனர்.
வந்தே மாதரம்
நம் நாட்டின் தேடிய கீதம் எது என்று யோசித்த சிலர் மிகவும் புத்திசாலித்தனமாக வந்தே மாதரம் என்று கூறினர்.
மூவர்ண கொடி
நம் நாட்டின் மூவர்ண கொடியில் உள்ள நிறங்களே பலருக்கு தெரியவில்லை. அதிலும் ஒருவர் சிவப்பு நிறம் அன்பின் அடையாளம் என்று தெரிவித்துள்ளார்.
கேள்விகள்
சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம், 5 சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர்கள் ஆகிய கேள்விகளுக்கு மக்கள் பதில் அளிக்க திணறினர்.
கொண்டாட்டம்
நம் நாடு பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரியாதவர்கள் அன்றைய தினத்தை எப்படி கொண்டாடுவது என்பது பற்றி மட்டும் தெளிவாக தெரிவித்தனர்.