ஜனாதிபதியானாலும் நிற்க வேண்டும்... ஆம்புலன்சிற்கு வழிவிட்ட எஸ்ஐக்கு குவியும் பாராட்டுகள்!
ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவர் கான்வாயை நிறுத்திய சப் இன்ஸ்பெக்டர், கடமை தவறாத போலீசுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பெங்களூரு : ஆம்புலன்ஸ் செல்வதற்காக குடியரசுத் தலைவர் சென்ற கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீசாருக்கு உயரதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டியுள்ளனர்.
கடந்த சனின்கிழமை பெங்களூருவில் மெட்ரோ ரயில் வேசையை துவக்கி வைக்கும் பணிக்கா குடியரசுத் தலைவர் பெங்களூரு வந்திருந்தார். அப்போது அவரது கான்வாய் என்று சொல்லப்படும் பாதுகாப்பு வளைய வண்டி ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தது.

குடியரசுத் தலைவர் வருகையால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதில் நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா ஈடுபட்டிருந்தார்.
டிரினிட்டி சர்க்கிள் பகுதியிலேயே தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் கான்வாய் வந்த போது சன் இன்ஸ்பெக்டர் திடீரென வாகனத்தை நிறுத்தினார்.
திடீரென கான்வாய் நிற்கவே என்ன ஆனது என்று தெரியாமல் பாதுகாப்பு அதிகாரிகள் குழம்பிப் போக மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதிகாரிகள் வரும் போது தான் தனது கடமையை சின்சியராக செய்வதாக நினைத்து பொதுமக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பவர்களுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டுள்ளார் நிஜலிங்கப்பா. அவரின் செயலை பாராட்டி உயரதிகாரிகள் பரிசுகளை வழங்கியுள்ளனர். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால் அவருக்கு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications