கடவுளே, சென்னையை காப்பாத்து: பெங்களூரில் சிறப்பு ஹோமம்
பெங்களூர்: வெள்ளத்தில் மிதக்கும் சென்னை இயல்புநிலைக்கு திரும்ப வேண்டிக் கொண்டு பெங்களூரில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. இதனால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க உயிர் போகும் அபாயத்தையும் தாண்டி மக்கள் பாலங்களில் கூடுகிறார்கள். சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி அல்லப்படுகிறார்கள்.
Bangalorians Doing Special Homa for chennai Relief in Okalipuram Ganesha Temple #chennai #chennairain #chennaiflood
Posted by A Senthil Nathan on Wednesday, December 2, 2015
இந்நிலையில் சென்னையில் இயல்பு நிலை திரும்பவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வேண்டிக் கொண்டு பெங்களூர் ஒக்கலிபுரம் விநாயகர் கோவிலில் ஹோமம் வளர்க்கப்பட்டது.
சென்னை மக்களும் கடவுளே, தயவு செய்து மழை நிற்கட்டும், வெயில் சுள்ளென்று அடிக்கட்டும் என்று இரவு, பகலாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications