ஜமுக்காளம் விரித்துப் போட்டு கட்டுக்கட்டாக பணத்துடன் சூதாட்டம்.. பெங்களூரில் 14 பேர் கைது!
பெங்களூர்: பெங்களூரில் நடந்த மிகப் பெரிய சூதாட்டத்தை போலீஸார் தடுத்து நிறுத்தி 14 பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பெங்களூரு நகர காவல்துறை குற்றப் பிரிவு துணை ஆணையர் அபிஷேக் கோயல் விடுத்துள்ள டிவிட்டர் செய்தி...

பெங்களூர் குற்றப் பிரிவு போலீஸார் மாரத்தஹள்ளி, எச்.ஏ.எல் பகுதியில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ஒரு வீட்டில் நடந்த பெரும் சூதாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ரெய்டின்போது பணம் வைத்து சூதாடிய 14 பேர் சிக்கினர். அவர்களைப் போலீஸார் கைது செய்துள்ளர். அவர்களிடமிருந்து மொத்தமாக ரூ. 18.28 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாக பணம் வைத்து அவர்கள் சூதாடி வந்தனர்.

பெங்களூர் பகுதியில் இதுவரை இவ்வளவு அதிக பணம் சூதாட்டத்தில் ஈடுபட்டு பிடிபட்டதில்லை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் சித்ரதுர்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு குறைந்தது ரூ. 1லட்சம் பணம் கட்ட வேண்டுமாம். அப்போதுதான் சேர்த்துக் கொள்வார்களாம். பலர் கடன் வாங்கி கூட இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications