ஜூலை 29ல் நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்: வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் வரும் 29 ஆம் தேதி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார்மயமாக்கல் போன்ற கொள்கைகளை எதிர்த்தும் வாராக்கடனாக நிலுவையில் உள்ள 13 லட்சம் கோடி ரூபாயை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது.

இந்த போராட்டம் இன்றும் நாளையும் நடைபெற இருந்தது. இதற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்தது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்தது. இந்நிலையில் ஜூலை 29ம் தேதி இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இதனால், வங்கிச் சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் வெங்கடாசலம் கூறுகையில், வேலைநிறுத்த போராட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து பிற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் 10 தனியார் வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் நாடு முழுவதும் 80,000 கிளைகள் மூடப்பட்டிருக்கும்.












Click it and Unblock the Notifications