மே 23ம் தேதி வங்கிகள் இயங்காது- ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பி.ஜே.நாயக் குழுவின் பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற 23ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

பி.ஜே.நாயக் தலைமையிலான மத்திய ரிசர்வ் வங்கி செயற்குழு, மத்திய அரசிடம் கடந்த வாரம் அளித்த பரிந்துரைகளில் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் அரசு பங்குகளின் அளவை 50%க்கும் கீழாக குறைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பரிந்துரைகளுக்கு பல்வேறு வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், வருகின்ற 23ந் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏ.ஐ.பி.இ.ஏ., ஏ.ஐ.பி.ஒ.ஏ., பி.இ.எஃப்.ஐ., ஐ.என்.பி.இ.எஃப்., ஐ.என்.பி.ஒ.சி ஆகிய 5 சங்கங்களும் அறிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications